Recent Comments

    Why this கொலை வெறி?

    thayagam featured-wakeup phoneசுரணை கெட்டுத் தூங்கிக் கிடக்கும் தமிழனை, எந்தத் தர்மதேவதையாலும் தட்டி எழுப்ப முடியாவிட்டாலும், ஊரிலிருந்து பணம் கேட்டு, நேரங் காலம் தெரியாமல் போன் அடிப்பவர்களால் எழுப்பி விட முடியும். நேரங் கெட்ட நேரத்தில் போன் அடித்து, 'என்ன நித்திரையாய் இருக்கிறியோ?' என்ற விசாரிப்பு வேறு. அடுத்த நாள் வேலைக்காய் அசந்து தூங்கையில்... கோபம் தாளாமல் சகோதரன் என்றும் பாராமல், புலி போல் பாய்ந்து குதறிக் கொலை செய்யும் எண்ணம் வரக் கூடும்;. Why this கொலைவெறி? வேண்டாம், கோபம் தணிக! பூமி உருண்டை என்பதும், ஒரு பக்கத்தில் பகலாக இருக்கும் போது, மறுபக்கத்தில் இரவாக இருக்கும் என்பதும் இந்த உலகத்தைச் 'சுத்திற' தமிழனுக்குத் தெரியாது. 'உலகமே என்னைச் சுற்றித் தானே இயங்குகிறது, எனக்குப் பகல் எண்டால் எல்லாருக்கும் பகல் தானே' என்ற எண்ணம் தமிழனுக்கு! எனவே இந்த 'உலகம் சுத்தும் வால் இவர்'களின் நலன் கருதி தாயகம் இணையத் தளம் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளின் நேரங்களை ஒரே இடத்தில் பார்க்க வசதி செய்துள்ளது. Thayagam.com என்ற இணையத் தளத்திற்குச் செல்லுங்கள். முன் பக்கத்திலேயே இந்த நேரங்களைப் பார்க்கலாம். தூக்கம் கலைக்கும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் 'ஏண்டா, Thayagam.com இல நேரத்தைப் பார்த்துட்டு போன் அடிக்கேலாதோ?' என அன்போடு அதட்டுங்கள். கோடரிக் காம்பாய் இனத்தை அழிக்க முற்படாதீர்கள்! எதிரி யார், சகோதரன் யார் என்று தெரியாமல், தமிழன் தமிழனை அழித்து இனமாய் அழிந்து போனது போதும். (இந்த தகவலை வெளிநாட்டில் உள்ள தொப்புள் கொடி உறவுகளுக்கு முகப்புத்தகம் மூலம் பகிர்ந்து கொண்டாலோ, மின்னோலை மூலம் தெரியப்படுத்தினாலோ, நீங்கள் நிம்மதியாக உறங்க முடியும், சுரணை கெடாமல்! கீழுள்ள பட்டன்களை அழுத்துவதன் மூலம் நீங்கள் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்ள முடியும்.)

    Postad



    You must be logged in to post a comment Login