Recent Comments

    ஈழத்தில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்று சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா…உங்கள் எண்ணம் என்ன?

    யாழ்ப்பாணிகளுக்கு ஒரு வியாதி இருக்கிறது.

    கூசாமல் பொய் சொல்வார்கள்.

    வியாதியின் அடுத்த கட்டத்தில், தாங்கள் சொன்ன பொய்யை தாங்களே நம்புவார்கள்.

    சரி, சுயமோகம் பிடித்த மனநோய்க் கூட்டம் என்று கவனிக்காமல் விட்டாலும், நோயின் உச்சக் கட்டத்தில், மற்றவர்களும் அதை நம்ப வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.

    நீங்கள் மறுத்தால், பிறகென்ன, துரோகி தான்.

    படிச்ச யாழ்ப்பாணம் என்பார்கள். அதை வேறு யாரும் சொல்வதில்லை.

    இவர்களே தான் சொல்லிக் கொள்வார்கள்.

    தலைவரை மண்டேலா, சே என்றெல்லாம் சொல்வார்கள். தென்னாபிரிக்கர்களோ, தென்னமெரிக்கர்களோ அதைச் சொல்வதில்லை.

    நான்காவது பெரிய இராணுவத்தை விரட்டினோம் என்பார்கள்.

    அடே, இந்த தம்மாத்துண்டு இலங்கை இராணுவத்திடம் அடி வாங்கிய போது, இந்தியா காப்பாற்றவில்லை என்று ஏண்டா புலம்புறீங்கன்னு கேட்டா…!?

    தலைவரைக் கண்டு சர்வதேசம் கதறுகிறது, தேர்தலை சர்வதேசம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்பார்கள்.

    அப்படி எந்தக் காலத்திலும் சர்வதேசம் வந்து சொன்னதுமில்லை.

    சர்வதேசம் சதி செய்யாவிட்டால், அண்ணை அடிச்சுப் பறிச்சிருப்பார் என்பார்கள்.

    அப்போ, பிறகேன் சர்வதேசம் தீர்வு வாங்கித் தரும் என்று ஜெனிவாவுக்கு காவடி எடுக்கிறீர்கள் என்று கேட்டால்…!?

    உலகமே பயங்கரவாதிகள் என்று புலிகளை தடை செய்யும். ஆனால் இவர்கள் ‘இல்லை, அவர்கள் புனிதப் போராட்டம் நடத்தும் விடுதலைப் போராளிகள்’ என்று முரண்டு பிடிப்பார்கள்.

    புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்த கனடாவில், நாலு பேர் புலிக் கொடியைப் பிடித்துக் கொண்டு நடந்து போய், தங்களை கனடியப் பிரதமர் பாராளுமன்ற படிக்கட்டில் வந்து சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற ஒரு சமூகத்தை வேறெங்கு நீங்கள் காண்பீர்கள்? அதை ஒரு வரலாற்று நிகழ்வாக, அந்த எதிர்பார்ப்பை இந்த சமூகத்திற்கு தீத்துகிற நாய்வாலர்கள், ஊளையிடலாளர்களை இந்த சமூகத்தில் மட்டும் தானே இருக்கிறார்கள்.

    இவர்களுடைய அரசியலை இவர்கள் எங்கே கற்கிறார்கள்? இதே தமிழ் தேசிய ஊடகங்களில் தானே!? இவர்கள் வாசிக்கிற தமிழ் பேப்பர்கள், ரேடியோக்கள், தொலைக்காட்சிகள், யூரியூப், பேஸ்புக்கிற்கும் அப்பால் இவர்களின் அரசியல் தேடல் என்ன? இவர்களின் வாய்களில் உதிர்கின்ற அரசியல் சொல்லாடல்கள் எல்லாமே இவர்களுக்கு இந்த நாய்வாலர்களால் திணித்து தீத்தப்பட்டவை தானே!

    கொஞ்ச நாளாக, காக்கை வன்னியன், எட்டப்பன் வரிசையில் கருணா என்று கொண்டு திரிந்தார்கள். யாரோ வானொலி நாய்வாலரின் உபயம் அது.

    சர்வதேசம் சதி செய்யாவிட்டால் தலைவர் ஈழத்தை அடிச்சுப் பறிச்சிருப்பார் என்று நம்புகிற இவர்கள், அந்த சதி செய்த சர்வதேசத்தை 42, 37, 22 நாடுகள் என்றெல்லாம் சொல்வதைக் கண்டிருக்கிறேன்.

    அந்த நாடுகள் எவை என்று கேட்டால் பேந்தப் பேந்த முழிப்பார்கள்.

    இப்படியாக இவர்களின் வாயில் திணிக்கப்பட்ட வார்த்தை தான்,

    இன அழிப்பு.

    புலிகள் கோலோச்சிய காலத்தில் நடந்த றுவாண்டா, பொஸ்னியா இன அழிப்பு பற்றி இவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதைப் பற்றி தமிழ்தேசிய ஊடகங்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அங்கே நடப்பது தான் இங்கே நடக்கும் என்றோ, நடக்கிறது என்றோ கூட இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பியதாகக் கூட இல்லை. ஆங்காங்கே ஒரு சில நாய்வாலர்கள் தங்களுக்கும் உலக அரசியல் தெரியுமாம் என்று காட்ட எழுதிக் கொண்டவை தவிர!

    தலைவர் அடிச்சுப் பறிப்பார் என்ற நம்பிக்கையில் கலரியில் இருந்து வாய் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இதெல்லாம் சம்பந்தமோ, சாத்தியமோ இல்லாதவையாகத் தான் இருந்தன.

    அவ்வாறான இன அழிப்புகளுக்கு தங்களுடைய தார்மீக எதிர்ப்பைக் கூட புலிகளோ, பிரபாகரனோ தெரிவித்ததில்லை.

    அழிக்கப்பட்ட இனங்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டு, அவர்களின் துயரங்களின் பங்கு கொள்வதாகக் கூட ஒரு அறிக்கை விட்டதில்லை.

    நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்த ஆர்மீனியப் படுகொலையை இன அழிப்பாக அங்கீகரித்து, நேட்டோவில் இருக்கும் துருக்கியை பகைக்க வேண்டுமே என்ற அச்சம் கூட இல்லாமல், கனடிய பாராளுமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தீர்மானம் எழுப்பப்பட்டதோ, தற்போதைய அமெரிக்க அரசு அதை இன அழிப்பாக அங்கீகரித்தது பற்றியோ, தமிழ் பொதுவெளியில் உரையாடப்பட்டதில்லை.

    வழமை போல, யாராவது நாய் வால் மேதாவி சொல்லியிருந்தால் தவிர! 

    நமீபியாவில் ஜேர்மானியர்கள் நடத்தியதும், கொங்கோவில் பெல்ஜியர்கள் நடத்தியதுமான இனப்படுகொலைகள் பற்றி இவர்கள் அறிந்திருப்பதாகவும் தெரியவில்லை.

    இனப்படுகொலைகள் எனப்படக் கூடிய, காலனித்துவ நாடுகளில் நடத்தப்பட்ட அடக்குமுறைகளோ, பூர்வகுடிகள் மீது நடத்தப்பட்ட அநீதிகளோ, கத்தோலிக்க திருச்சபை தென்னமெரிக்கா, கனடிய ஆதிக்குடிகள் மீது நடத்திய குற்றங்களோ இவர்களுக்கு அன்னியமானவை. இவை  லங்காசிறியில் வந்தால் தான் தெரிந்திருக்கும்.

    ஆர்மீனியப் படுகொலையை அங்கீகரிப்பது வெறும் symbolic நிகழ்வு தான். ஆர்மீனியர்களும் அதே அளவு அழிப்புகளில் ஈடுபட்டார்கள் என்று துருக்கி இன்றும் நியாயப்படுத்தினாலும், அது இன அழிப்பாக ஏற்கப்படுகிறது.

    நமீபியா தனது நாட்டில் நடந்த அழிப்புகளுக்கான நட்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்து, ஜேர்மனி அதற்கான நட்ட ஈடுகளை வழங்க முடிவு செய்திருக்கிறது.

    இதில் தமிழர்களுக்கு இதெல்லாம் symbolic க்காக இருப்பது பற்றியோ, அதற்கான நட்ட ஈடு கோரப்படுவது பற்றியோ பிரச்சனை இல்லை.

    இவர்களுடைய பிரச்சனை, மகிந்த ராஜபக்ஷவை மனோகரா மாதிரி கட்டி இழுத்து வந்து கழுவில் ஏற்ற வேண்டும் என்பதே.

    றுவாண்டா, பொஸ்னியா இன அழிப்புகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரி!

    இல்லாத பட்சத்தில், ‘எமது மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றதற்கான தண்டனை’ என்று பேஸ்புக்கில் போட்டு கொண்டாடுவதற்கு, மகிந்தவுக்கு கொடிய நோயாவது பிடிக்க வேண்டும் என்பது தான் இவர்களின் வேண்டுதல்!

    அதிலும், இவர்கள் தான் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக வேண்டும் என்று தலையால் மண் கிண்டியவர்கள் என்பது சம்பந்தமுள்ள கொசுறு! 

    இவர்களுடைய இன அழிப்புக் கோரிக்கை, பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனை நம்பிய தங்கள் முட்டாள்தனத்தை மறைக்க, வாங்கிய அடி பலமான நிலையில், அவமானத்திற்கு பழி தீர்த்துக் கொள்ள, இன்னொரு சண்டியனை சர்வதேச சமூகத்தில் தேடுகின்ற செயற்பாடு தான்.

    இதற்கும் அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெறுவதற்கோ, ஏன் அந்த அழிவுக்கான நீதியைப் பெறுவதற்கோ எந்த சம்பந்தம் இல்லை.

    கவனமாகப் பார்த்தால், இந்தக்கோரிக்கையை தூக்கிக் கொண்டு திரிபவர்கள் புலன் பெயர்ந்தவர்கள் மட்டும் தான். குறிப்பாக கனடாவில் அரசியல் கனவுகளோடு இருப்பவர்களும், ஏதோ நினைவு தினங்களுக்கு பெரிய நோட்டீஸ் அடித்து மண்டபங்களை நிறைத்து கொடியும் கொத்துரொட்டியும் விற்று பையை உருவும் யாவாரிகளும்!

    அங்கே வாழ்கிறவர்களில், ஜெனிவாவில் தீர்வு வாங்கித் தருவதாகச் சொல்லி, பாராளுமன்றம் போய் அரசியல் செய்கிறவர்கள் தவிர்ந்து வேறு யாரும் யுத்தம் முடிந்த இத்தனை நாட்களின் பின்னாலும் இன அழிப்பு என்று கூச்சல் போட்டதில்லை.

    அவர்களின் பிரச்சனை காணாமல் போன தங்கள் பிள்ளைகள் பற்றியதாகவும், தங்கள் அன்றாட வாழ்வைக் கொண்டு செல்வது பற்றியதுமானதே தவிர, இனப்பிரச்சனை என்பது தீர்வு வாங்கித் தரப் போவதாக கயிறு திரிக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமானதே!

    அவர்களும் இன அழிப்பு என்று மகிந்தவைக் கழுவில் ஏற்ற வேண்டும் என்று பகிரங்கமாக சவால் விடத் துணிச்சல் வர முடியாத அளவுக்கு மடியில் கனங்களுடனும், சுயலாப நரிப்புத்திகளுடனும் உள்ளவர்கள்.

    கனடா ஒரு பல்கலாசார நாடு. இங்கே சகல இனத்தவர்களுக்கும் தங்கள் கலாசார, பண்பாட்டு அம்சங்களை பேணவும், வளர்க்கவும் இடம் அளிக்கிறார்கள்.

    அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கலாசாரத்தைக் கொண்டாடுவதற்காக, Heritage மாதம் என்று பிரகடனப்படுத்தி, அதைக் கொண்டாட வழிவிடுகிறார்கள். அதற்கு நகரசபை மட்டத்தில் தொடங்கி, மத்திய அரசு வரைக்கும் நிதி உதவி வேறு அளிக்கிறார்கள்.

    இதற்குள், கனடிய அரசியல்வாதிகளுக்கு இந்த இனங்களின் வாக்குகள் தேவை. அவர்களோடு ஒட்டிக் கொண்டு தாங்களும் அரசியல்வாதிகளாகும் எண்ணத்தில் இந்த இனங்களின் ‘சமூகத் தலைவர்கள்’ உள்ளார்கள். இவர்கள் அவர்களிடம் ‘இப்படி உசுப்பேத்தினால், இந்த இனம் வாக்களிக்கும்’ என்றவுடன் அவர்களும் அதற்கென்ன? என்று இலகுவாகவே வழி விட்டு விடுகிறார்கள்.

    மறுபுறத்தில் தொகையான புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. அவற்றுக்கு வீதிகள் தேவை. அவற்றுக்கு பெயர்கள் தேவை. அதையும் இந்த ஒட்டுண்ணிகள் பயன்படுத்தி, ஊர் பெயர்களை வீதிகளுக்கு சூட்டுகிறார்கள். இங்கே காந்தி, ஜின்னா முதல் சகல சர்வதேச ஊர்கள், மனிதர்கள் பெயர்களில் உண்டு என்ற விபரம் எல்லாம் கனடாவில் வாழ்ந்தாலும் யாழ்ப்பாணக் கிணற்றுக்குள் வாழ்கின்ற யாழ்ப்பாணிகளுக்கு தெரியாது.

    இந்த பாரம்பரிய மாதத்தை தானே வாங்கித் தந்ததாக ஒருவரும் மற்றவர்களும் மோதிக் கொண்டு போட்டிக்கு நடத்துகின்ற கூத்து தமிழர்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.

    தான் கொடுக்கும் பேட்டிகளில் தனது மேசைக்கு பின்னால் தான் வாங்கிக் கொடுத்த வன்னி வீதியின் பெயர்ப் பலகை வருமாறு இன்னொரு அரசியல்வாதி கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்.

    இவர்கள் எல்லாருமே ஏதோ ஈழத்தை அடிச்சுப் பறித்த மாதிரி, இந்த சாதனைகளை தாங்களே தனித்து நின்று நிலைநாட்டியதாக இந்த யாழ்ப்பாணிக் கிணற்றுத் தவளைகளுக்கு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    கொஞ்ச நாளைக்கு முன்பாக, கனடாவில் உங்கள் நாய்க்கும் முத்திரை வெளியிடக்கூடிய நிலையைப் பயன்படுத்தி, முத்திரை வெளியிட்டு, கனடா அரசு முத்திரை வெளியிட்டதாக இந்த யாழ்ப்பாணிகளை சில அயோக்கியர்கள் சுத்திக் கொண்டிருந்தார்கள்.

    இப்படியாகத் தானே, தனது அரசியல் கனவுகளுக்காக, புலிகளுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த ஒருவர் தேர்தலில் இறங்குகிறார். வழமை போல, யாழ்ப்பாணிகளும் ஈழத்தை கனடிய பாராளுமன்றங்களில் அடிச்சுப் பறிக்கலாம் என்று, தமிழன் தமிழனுக்கு தான் வோட்டு போட வேணும் என்று, அவருக்கு முண்டு கொடுக்கிறார்கள்.

    தேர்தல் சமயமாகப் பார்த்து, இவரது புலி ஆதரவு மாகாண அரசியல்கட்சிக்கு பிரச்சனையாகி விட, இவர் ‘புலிகளை நான் அறியேனே!’ என்று மறுதலித்து அறிக்கை விட்டார்.

    பிறகென்ன? தற்கொலைப் போராளிகளுக்கு விளக்கு கொளுத்தி, கொத்து ரொட்டி சாப்பிடும் யாழ்ப்பாணிகளுக்கு  ஒரே இரவில் அவர் துரோகியாகி விட்டார்.

    அதாவது, இனத்தை விற்று துரோகம் செய்து விட்டார்! அவர் ‘இல்லை, நான் புலி ஆதரவாளன் தான்’ என்று தற்கொடை செய்திருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எதிர்பார்ப்பு.

    துரோகி மாவீரன் ஆக தன் பாவங்களைக் கழுவ வேண்டும். அதற்கு ஒன்ராறியோ மாகாண அரசிடம் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்ல, அவர்களுக்கும் என்ன? மறுத்தால், அதை வைத்து எதிர்க்கட்சிகள் லாபம் அடைந்து விடுமே!?

    கொஞ்ச நாளைக்கு முன்னால், ஆப்கானிஸ்தானில் கனடிய இராணுவவீரர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் பெருந்தெருவை Highway of Heroes என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று யாரோ புறப்பட்டார்கள். அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம் தேசியவாதம்.

    அதெல்லாம் எதற்கு என்று தங்கள் பதவிகளை இழக்க அரசியல்வாதிகள் தயாராக இருக்கவில்லை. ஏகமனதாக எல்லாருமே பெயர் மாற்றினார்கள்.

    இப்போது ஆப்கானிஸ்தானில் கனடிய துருப்புகளும் இல்லை. அந்த பெருந்தெருவை அந்தப் பெயரோடு யாரும் அழைப்பதுமில்லை.

    இப்படித்தான் ஒன்ராறியோ அரசும் இந்த இன அழிப்பு தீர்மானத்தை அங்கீகரித்தது. 

    இது மத்திய அரசின் முடிவு இல்லை என்பதோ, மாகாண அரசின் தீர்மானம் வெறும் symbolic ஆனதோ என்பதெல்லாம் இவர்களுக்கு பிரச்சனை இல்லை.

    இதே மாகாண அரசிடம் போய், பாலஸ்தீனர்களின் இன அழிப்பு பற்றி தீர்மானம் போடுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். இதுவரை அவர்களுக்காக பேசிய தேசிய ஜனநாயகக் கட்சி கூட இழுத்தடிக்கும். தங்கள் அரசியல் எதிர்காலத்தை பலி கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.

    ஆனால் இது நோகாமல் நொங்கு குடிக்கிற விசயம். தாங்களே அதைச் செய்தோம் என இந்த யாழ்ப்பாணிகளைச் சுத்தலாம்.

    பிறகென்ன? இன அழிப்பு தீர்மானத்தைப் பெற்றுத் தந்த பெருமையுடன் இந்த பிரதமர், முதல்வர்கள் எல்லாம் தெருவிழாவில் கொத்துரொட்டி அடிக்க, இந்த யாழ்ப்பாணிகள் ஈழம் கிடைச்ச மகிழ்ச்சியில் புல்லரிப்பார்கள்.

    பேஸ்புக்கில் படம் போட்டு, ‘நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும்’ தான்!

    ஈழத்தை அடிச்சுப் பறிச்ச மாதிரி, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வைத்ததன் மூலம் துரோகி தன் பாவங்கள் கழுவப்பட்டு, தற்போதைய மார்க்கட் நிலவரப்படி மாவீரன் ஆக்கப்பட்டிருக்கிறார்.

    இந்த அரசியல்வாதிகளின் விளம்பரங்களுக்காக எச்சில் ஒழுக அலையும் ஊளையிடலாளர்கள், அவர்களை அண்டிப் பிழைப்பு நடத்தும் நாய் வாலர்கள், கனடிய அரசியல் கனவுகளோடு அலையும் ஆட்டிறைச்சி மண கோட் சூட் தமிழர்கள் எல்லாரும் இதை கோட்டையில் கொடியேற்றிய மாதிரி கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதனால், அங்குள்ள மக்களுக்கு எந்தப் பயனாவது கிட்டுமா?

    இல்லை!

    ஆனால், இங்குள்ள யாழ்ப்பாணிகளுக்கு பெரிய பயன்.

    இந்த நினைவு கூரல்களை செய்வதற்கு அரச உதவிப் பணம் நகர சபை முதல் மத்திய அரசு வரைக்கும் கிடைக்கும்.

    அரச உதவிப் பணம்.

    தமிழர்கள்!

    பிறகென்ன? கொண்டாட்டம் தான்.

    சங்கம் வைத்திருக்கும் தமிழர்கள் எல்லாம், தாங்கள் இந்த பாரம்பரிய மாதத்தைக் கொண்டாடுவதாக பணம் வாங்கி, மாமன், சித்தப்பன், குஞ்சப்பு, மருமகள் எல்லாம் சங்கப் பதவி வைத்துக் கொண்டு பங்கு போடுவதில் தான் முடிகிறது.

    ஒரு இனத்தின் அழிவில் பிழைப்பு நடத்த யாழ்ப்பாணியை விட வேறு யாராலும் இந்த அளவுக்கு முடியாது.

    அதைச் சொல்லும் நாங்கள் வழமை போல, ஆயுட்கால துரோகிகள் தான்!

    இறுதி யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதை இன அழிப்பு என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியுமா?

    கொல்லப்பட்டவர்கள் எல்லாரும் தமிழர்கள் தான். ஆனால் தமிழர்கள் எல்லாரும் கொல்லப்படவில்லை.

    இது இனத்தை அழிப்பதற்கான யுத்தம் இல்லை என்று அரசாங்கம் வாதிடக் கூடிய நிலையைத் தான் புலிகள் விட்டுச் சென்றார்கள்.

    இரண்டு தடவைகள் ஜே.வி.பி புரட்சிகளின் போது, முழுக்க முழுக்க சிங்களவர்களே கோரமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

    அதை இன அழிப்பு என்று வரையறுக்க முடியுமா?

    இது அரச அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கானது. அதை எந்த அரசு இருந்தாலும் செய்யும். அது இன வேறுபாடு பார்க்காது. சர்வதேசமும் அதில் குற்றம் காணாது.

    போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கி, அதற்கான நியாயங்களை அரசுக்கு வழங்கி விட்டு, அரசை மட்டும் குற்றம் சாட்ட முடியாது.

    தப்பி வந்தவர்களை வெளியேறாதபடிக்கு புலிகள் சுட்டார்கள். வந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை, நாசிகளின் படுகொலை முகாம்களாக வர்ணித்து, அவர்கள் படுகொலை செய்யப்படுவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், அங்கு விபசாரம் நடக்கிறது என்று பிரசாரம் செய்தார்கள்.

    கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டார்கள்.

    இடம் பெயர்ந்து முகாமில் இருந்த மக்கள் திரும்பவும் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

    இதை சில ‘புலன் பெயர்ந்தவர்கள்’ இன அழிப்பு என்கிறார்கள் என்பதற்காக சர்வதேச சமூகத்தையும் அதை இன அழிப்பாக அங்கீகரிக்கும்படி வாதிட முடியாது.

    ஆனால், யுத்தக் குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற அடிப்படையில் சர்வதேசத்தை நடவடிக்கை எடுக்கும்படி அணுகியிருக்கலாம்.

    இவர்களுடைய நோக்கம் தீர்வு பெறுவதில்லை, தாங்கள் பிழைப்பு நடத்துவதே!

    சாத்தியமான விடயங்களாயின், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.

    நடைபெறவே சாத்தியம் இல்லாத ஒன்றை வைத்து, எதுவுமே செய்யத் தேவை இல்லாமல், வாழ்நாள் பூராவும் கூச்சல் போட்டுக் கொண்டே இருக்கலாம்.

    அது தான் இவர்களுக்கு வேண்டும்.

    கேணல் தீபன் உட்பட்டோர் கொல்லப்பட்ட சண்டையில் அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்ட விதத்தில், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சாத்தியங்கள் இருந்தன.

    கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட போராளிகளின் படங்கள் வெட்டி சித்திரவதை செய்தபடி இருந்த நிலையில் வெளியாகியிருந்தன.

    இசைப்பிரியாவின் ‘அவல ஓலம்’ வீடியோவாக வந்திருந்தது.

    காணாமல் ஆக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் சரணடைந்ததற்கான ஆதாரங்களும் சாட்சிகளும் இருந்தன.

    புலிகள் தாக்குதல் நடத்தியதற்கான பதில் தாக்குதலாக இருந்தாலும், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

    இழுத்துச் செல்லப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தாலும், செஞ்சோலை மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு சிறார்கள் கொல்லப்பட்டார்கள்.

    இவை பற்றிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சரியான ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறதா?

    இதுவரையில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது கூட, தமிழர் தரப்பால் ஆவணப்படுத்தப்பட்டதில்லை.

    சனல் 4க்கு வீடியோக்களைக் கொடுப்பதும், கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள் என்று பேஸ்புக்கில் கணக்கு விடுவதும் சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லை.

    கிளி பாதரைக் கொலை செய்து அரசின் மேல் பழி போட்டால், சர்வதேசம் தலையிடும் என்ற புலிகளின் சிந்தனை மாதிரி…

    வீதியில் நின்று புலிக்கொடி பிடித்தால், சர்வதேசம் வந்து விசாரணை செய்யும் என்று இந்த யாழ்ப்பாணிகளைத் தவிர வேறு யார் நம்புவார்கள்?

    சர்வதேச விசாரணை என்பது இரு பக்கம் கூரான வாள். எங்களையும் வெட்டும்.

    சர்வதேச விசாரணையின் போது, அரசின் நடவடிக்கைகள் மட்டும் அல்ல,

    புலிகளின் நடவடிக்கைகளும் வெளிவரும்.

    அதற்கு இவர்கள் தயாராக இல்லை.

    ஆனால், இன அழிப்பு என்று கூச்சல் போட்டால் சர்வதேசம் ஓடி வந்து காப்பாற்ற வேண்டும் என்பது தான் இவர்களின் எதிர்பார்ப்பு.

    அங்கே அரசியல் தற்போது பாராளுமன்றக் கதிரை அரசியலாகி விட்டது. அது தீர்வுக்கான அரசியல் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிராம சபைத் தேர்தல் நேரங்களில் கூட அவ்வாறான மாயை தான் உருவாக்கப்படுகிறது.

    அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அரசியல் கைதிகள் விடுதலையோ, காணாமல் போனவர்களுக்கான உத்தியோகபூர்வமான அத்தாட்சிகளைப் பெற்றுக் கொடுப்பதோ அவசியமானதாக இல்லை. உசுப்பேத்தினால் இந்த முட்டாள் கூட்டம் எடுபடும் என்பது தெரியும். புலன் பெயர்ந்த கூட்டம் வெளிநாட்டில் இருந்தபடி தாங்கள் நினைத்த மாதிரி அரசியல் செய்ய வேண்டும் என்ற நினைப்பில் காசை அள்ளி வீசும் என்பதும் தெரியும்.

    தீபாவளி தீர்வு, ஜெனிவாவில் பொதி என்று இந்த யாழ்ப்பாணிகளை எந்தக் காலத்திற்கும் ஏமாற்றலாம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

    கனடாவில் அரசியல் கனவுகளில் திளைப்போர்கள் இந்த ‘புலன் பெயர்ந்த’ கூட்டம் கேட்க விரும்பும் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு இனத்தில் அழிவில் முழு இனமுமே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.

    முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ‘இனச் சுத்திகரிப்பு’ என்று சொல்ல விரும்பாத யாழ்ப்பாணிகள், இன அழிப்பு என்று சர்வதேசத்திற்கு முன்னால் கூச்சல் போடுவது, ஓநாய்க் கூச்சல் போட்ட இடையன் கதை தான்.

    இந்த இன அழிப்பு கூச்சல் போடுகிறவர்கள் எல்லாம், மாவிலாறில் தொடங்கி, மன்னார், மடு என்றெல்லாம் இராணுவம் வந்த போது, மக்கள் இறந்தது பற்றி எந்த அக்கறையும் கொண்டிருந்ததில்லை.

    கிளிநொச்சி வந்த போதும், ‘உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறாங்கள்’ என்று தாங்கள் சொன்ன பொய்யை தாங்களே நம்பிக் கொண்டிருந்தார்கள்.

    புலன் பெயர்ந்த நாடுகளில் கொடி பிடித்தவர்கள் மக்களைக் காக்குமாறு கோரினார்களா?

    புலிகளை அங்கீகரிக்குமாறும் பிரபாகரனே எங்கள் தலைவன் என்றும் தானே கூச்சல் போட்டார்கள்.

    அந்த நேரங்களில் எல்லாம் தாயகம் இணையத் தளத்தில், மக்களின் அழிவை முதன்மைப்படுத்துங்கள், அதுதான் சர்வதேசத்தின் கவனத்தை பெற வைக்கும் என்று எழுதினேன்.

    கேணல் தீபன் போன்றோர் கொல்லப்பட்ட கல்மடுக் குளம்  வந்த பின்னால் தான் இவர்கள் மக்களின் உயிர் பற்றி அக்கறை கொண்டார்கள்.

    அப்போது கூட, மக்களை வெளியேற அனுமதிக்கும்படி புலிகளை இவர்கள் கேட்டதில்லை.

    தலைமையைக் காப்பாற்ற, மனிதக் கேடயங்களாக மக்களைப் பலி கொடுப்பது தான் இவர்களின் நோக்கமே.

    முழு இனமும் அழிந்து, ஒற்றைப் பிரபாகரன் தப்பியிருந்தால், ‘ஏலுமா? ஏலாது! ஏலுமெண்டா பண்ணிப் பார்!’ என்று தெருவில் நடனமாடியிருப்பார்களே ஒழிய, மக்கள் அழிந்தது பற்றி எந்த கவலையும் கொண்டிருக்க மாட்டார்கள்.

    இனத்தை அழிக்க எதிரிக்கு வழி செய்து கொடுத்த மானிடத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள் இவர்கள்.

    எனது பார்வையில் அரசின் இன அழிப்பு ஆட்களைக் கொல்வதில் இல்லை. இவர்களுடைய வெளிநாட்டுக் கனவுகளுக்கு வழி வகுப்பதில் தான் இருக்கிறது.

    இந்த யுத்தத்தைச் சாட்டி நாட்டை விட்டு வெளியேற விட்டது, மிகத் தந்திரமான இன அழிப்பு.

    ஒரு புறம் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதேசங்களின் உறுப்பினர் எண்ணிக்கை, சனத்தொகைக் கணிப்பீட்டின்படி குறைக்கப்பட்டிருக்கிறது.

    வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம், அரசுக்கு அன்னிய செலாவணியைத் தரும் பெரும் cash cow.

    இன்றைக்கும் கனடா கதவைத் திறந்தால், முழு யாழ்ப்பாணிகளும், கனடாவின் சிறிய மாகாணமான பிரின்ஸ் எட்வேட் தீவில் குடியேறி ஈழம் கேட்பார்கள்.

    பிறகு என்ன? இந்த சீரிய சிந்தனையை வழங்கிய மூத்த எழுத்தாளரைப் பார்த்து சர்வதேசம் திணறிக் கொண்டிருந்திருக்கும்.

    நாலு பேர் அரச உதவிப் பணத்தில் கொடுக்கும் இலக்கிய விருதும்  ஒரு நாட்டின், ஈழத்து விருதாக உயர்வடைந்திருக்கும்.

    தமிழர்களை கொன்றது இன அழிப்பு என்றால்…

    ஒரு இனத்தில் அரசியல் தலைமைகளை அழித்து, அதன் ஒரு தலைமுறையைப் பலி கொடுத்து, அடுத்த பல தலைமுறைகளுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாதபடிக்கு ஒரு அயோக்கிய அரசியல்வாதிக் கூட்டத்தையும், அந்த அழிவில் கூசாமல் பிழைப்பு நடத்தும் புலன் பெயர்ந்த  திருட்டுக் கூட்டத்தையும் விட்டுச் சென்றதை விட, மோசமான இன அழிப்பு என்னவாக இருக்கும்?

    ஐநாவின் இன அழிப்பிற்கான சாசனம், complicity in genocide shall be punishable என்கிறது.

    இந்த இன அழிப்பிற்கு உடந்தையாக, மக்களைப் பலி கொடுத்து புலிகளை காப்பாற்ற முயன்ற இவர்கள் எல்லோருமே இன அழிப்பு குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login