Recent Comments

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் -15

    T .சௌந்தர்

    தனி ராஜ்ஜியமும்  திறமைவாய்ந்த சில புதியவர்களும்

    கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பணம் [1952] படத்தின் மூலம்  அறிமுகமானார்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. தமக்கு ராமமூர்த்தி விஸ்வநாதன் என வைத்துக் கொண்ட பெயரை மாற்றி தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. என மாற்றி வைத்ததற்கு நல்ல காரணமும் சொன்னார் ,விஸ்வநாதா நீ இளையவன் ,நீ வீழ்ந்தால் வயதில் மூத்த ராமமூர்த்தி தாங்குவான்; அதைவிட இப்படி சொல்வதே நன்றாகவும் உள்ளது என்றும் கூறினார்.

    முன்னணிக்கு வந்து கொண்டிருந்த பழம்பெரும் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் இசைக்குழுவில் ஹார்மோனியம் வாசிப்பவராக விஸ்வநாதனும் ,வயலின் வாசிப்பவராக ராமூர்த்தியும் இருந்தனர். ராமமூர்த்தி தனது தந்தையிடம் முறையாக இசை  பயின்ற இசைப்பாரம்பரியத்திலிருந்து வந்தவர். வயலின் கலைஞராகவே இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்.ஆனால் விஸ்வநாதன் இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆவல் மிகுந்தவர்.ராமமூர்த்தி தன்னுடன் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தவர். சங்கீதத்தின் சங்கதிகள் நன்கு அறிந்த ராமமூர்த்தி திரையுலகின் இங்கிதங்கள் கைவரப்பெறாதவர்.

    இருவரும் இசையமைப்பாளராக இணைந்து கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு  மேல் இசையமைத்து புகழின் உச்சியிலிருந்து போது பிரிந்தனர். பிரியக்கூடாத நேரத்தில் பிரிந்து முப்பது வருடத்தின் பின் [1995] மீண்டும் இணைந்தனர்.

    விஸ்வநாதன் தொடர்ச்சியாக பல வாய்ப்புகளைப் பெற்று களத்தில் தனது ராஜ்ஜியத்தை அமைத்துக்கொண்டார்.தமிழ் திரையுலகினரின் அதி மூடத்தனத்தின் விளைவாக ஓரம்க ட்டப்பட்ட திறமைசாலிகளில் ஒருவரானார் ராமமூர்த்தி. விஸ்வநாதன் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களை இசையமைத்துப் புகழ் பெற்றாலும் அவரின் சிறந்த பாடல்கள் எவை என்று ரசிகர்களிடம் கேட்டால் அவர் ராமமூர்த்தியுடன் மெல்லிசைமன்னர்களாக இருந்த காலத்தின் ப, பா வரிசைப்படப்பாடல்களையே கண்மூடிக் கொண்டு கூறுவர். ப,பா வரிசைப்படப்பாடல்களில் அமைந்த வாத்தியங்களின் சேர்ப்பு , இனிமை ,அதனால் உண்டான இசை லயம்  சிறப்பாக இருந்ததே அதன் காரணமாகும். வாத்தியங்களை தகுந்தபடி ஒழுங்கமைப்பதில் அதிக கவனம் செலுத்தியவர் மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி.

    மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அவ்வப்போது சில பாடல்களை பாடியது போல மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி  அவ்வப்போது தனியாக வயலின் வாசித்து தனது  திறமையை வெளிப்படுத்தினார். அவரது தனி வாசிப்பை இரு பாடல்களில் நாம் கேட்கலாம்.

    01  வந்த நாள் முதல்  - பாவமன்னிப்பு 1961 - டி.எம்.சௌந்தரராஜன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02  கண் போன போக்கிலே   - பணம் படைத்தவன்  1961 - டி.எம்.சௌந்தரராஜன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    இந்த இரண்டு பாடல்களின் நடுவே வரும் அற்புதமான தனி வயலினை இசைத்தவர் மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி.

    இந்தக்காலகட்ட தமிழ்ச்சினிமாவில்   பல புதிய முகங்கள் அறிமுகமாயினர். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு மாபெரும் நட்சத்திரங்களுடன்  பல இளைய நடிக, நடிகையர்கள் நுழைய ஆரம்பித்தனர். சினிமா நடிகர்களைத்  தாண்டி , கதையமைப்பிலும், படமாக்கும் உத்திகளிலும் புதுமைகளை செய்தார் இயக்குனர் ஸ்ரீதர், தனக்கென  ஓர் அந்தஸ்தையும் உருவாக்கி தமிழ் சினிமாவை ஒரு புதிய தளத்திற்கு நகர்த்த முனைந்து கொண்டிருந்தார். முக்கோணக்காதல் என்ற என்றொரு   வட்டத்தை தாண்டாத ஸ்ரீதரின் புதுமைக்கும் ஓர் எல்லையிருந்தது.

    நடுத்தர வயதைத்தாண்டியும் இளைஞர்களாக வேஷம் கட்டிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி,ஜெமினி  போன்றோருக்கு மத்தியில் நிஜமான இளைஞர்களான ரவிசந்திரன், ஜெய்ஷங்கர் ,ஏ.வி.எம்.ராஜன், சிவகுமார், ஜெயலலிதா, நிர்மலா ,கே.ஆர்.விஜயா  போன்றவர்கள் அறிமுகமானாலும் ,முன்னவர்கள் செய்ததையே இவர்களும் செய்ய நேர்ந்தது.

    மெல்லிசைமன்னர்கள் பிரிந்த இக்காலத்தில் நடிகர்கள்  மட்டுமல்ல , இசையமைப்பாளர்களில் ஏற்கனவே இருந்த கே .வி.மகாதேவன்,  வேதா,கோவர்தனம் , வி.தட்க்ஷிணாமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்பார்த்தசாரதி, பி.எஸ்.திவாகர்  போன்ற  இசையமைப்பாளர்களுடன் புதுப்புது இசையமைப்பாளர்களும் அறிமுகலாயினர். அவர்களில் வி.குமார் , சங்கர் கணேஷ் , ஜி.தேவராஜன் , ரமணன் , குன்னக்குடி வைத்தியநாதன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் இசை 1970 களின் இறுதிவரையில் ,   1980 களின் ஆரம்பம் வரையிலும் இசை தந்தார்கள்.

    பிரிவுக்குப் பின் ராமமூர்த்தியைப் போலல்லாது விஸ்வநாதன் அதிக படங்களுக்கு இசைமைக்க முடிந்தமைக்கான காரணம் தரமாகவும், வேகமாகவும்  இசையமைக்கும் ஆற்றலே! இக்காரணத்தாலேயே எம்.ஜி.ஆர் சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுக்கு மட்டுமல்ல பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இசையமைக்கும் ஓர் நட்சத்திர இசையமைப்பாளராக,  இசைக்கலைஞனாக  அவரால் வளர முடிந்தது. தமிழ்த்திரை வரலாற்றில் ஓர் நட்சத்திர இசையமைப்பாளர்களாக செல்வாக்கு பெற்றவர்கள் மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன்  ராமமூர்த்தி இணையினர் என்பது மிகையான கூற்றல்ல. பின்னர் இந்தப்படம் விஸ்வநாதனுக்குரியதாக அமைந்துவிட்டது.

    1960 ம் ஆண்டிலிருந்து ,ஆண்டுக்கு சராசரி  50 படங்கள் வெளிவந்த காலத்தில் ஆண்டுக்கு 5 படங்களுக்கு இசையமைத்த மெல்லிசைமன்னர்கள் 1962 இல் 15 படங்களுக்கும் இசையமைக்கும் உச்சநிலைக்கு சென்றார்கள். 1965 ம் ஆண்டு பிரிவுக்குப் பின்னர் சராசரியாக விஸ்வநாதன் தனியே வருடத்திற்கு 15 படங்களுக்கு இசையமைத்தார். ஒரு இசையமைப்பாளனாக அதிக எண்ணிக்கையில் விஸ்வநாதனாலேயே இசையமைக்க முடிந்ததன் காரணம் அவரது அசாத்தியமான இசையமைப்பு வேகமே ஆகும்.

    வேகமாக , விரைவாக  இசைமைத்தாலும் மெட்டமைப்பில் அழகும் , வலிமையையும் , உணர்ச்சி செறிவும் மிகுந்திருந்தது என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். அதே போல இக்காலங்களில் இசையமைத்துக் கொண்டிருந்த இசையமைப்பாளர்களின் பெயர் பட்டியலையும் ,அவர்கள் இசைமைத்த பாடல்களையும் எண்ணிப் பார்க்கும் போது இவர்களையும் தாண்டிய தனித்தன்மை   விஸ்வநாதனின் இசை உத்வேகம் நம்மை பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலும் எதை எடுத்தாலும் வெற்றி பெற வைக்கும் நட்சத்திர அந்தஸ்துமிக்க இருபெரும் திலகங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் விஸ்வநாதன் என்பதும் அக்கால நிலையாகவே இருந்தது. அதுமட்டுமல்ல புதுமுக நாயகர்களான ஜெய்சங்கர் , ரவிசந்திரன் போன்ற நடிகரின் படத்திலும் சிறப்பான பாடல்களை விஸ்வநாதன் கொடுத்தார்.

    1960  களின்  மத்தியில் அறிமுகமான புது இசையமைப்பாளர்களான வி.குமார் , சங்கர் கணேஷ் , குன்னக்குடி வைத்தியநாதன்  போன்றோருடன்  ஏலவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இசையமைத்துக் கொண்டிருந்த கோவர்தனம் , வி.தட்க்ஷிணாமூர்த்தி , ஜி.கே.வெங்கடேஷ் , டி.ஆர்.பாப்பா , மலையாளத்தில் புகழ் பெற்றிருந்த ஜி.தேவராஜன் தமிழ்திரைப்படத்தில் இசையமைக்க அதிக வாய்ப்புகளை பெற்றார்கள்.

    இவர்களில் முக்கியமானவராக வி.குமார் தனியிடம் பிடித்து நல்ல , நல்ல பாடல்களைத் தந்தார். எளிமையும் , இனிமையுமிக்க பாடல்களைத்தந்த வி.குமாரின் இசையமைப்பில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் இசைவாடையும் இருந்ததது என்பதை அவரது பாடல் அமைப்புக்களில் நாம் கேட்கலாம். செவ்வியல் இசைமீதான இவரது ஆர்வம் நாணல் படத்தில் " குயில் கூவி துயில் எழுத்துப்ப " என்ற பாடலின் அருமையை கேட்கலாம்.

    கவிஞர் வாலி ஒருமுறை சொல்லியது போல " தமிழ் நாட்டில் திருக்குறளைத் தவிர மற்றதெல்லாம் கண்ணதாசன் எழுதினார் என்றே நினைக்கின்றார்கள்." என்பது போல இளையராஜா வரும்வரையில் எல்லாப்பாடல்களையும் விஸ்வநாதன் இசையமைத்தார் என்ற எண்ணம் ஒருசில தீவிர இசைரசிகர்களைத்தவிர பரவலான மக்களிடமும் இருந்தது.

    புதிதாக வருபவர்களிடம் புத்தூக்கம் இருப்பது இயல்பாயினும் தமக்கும்  முன்பிருந்தவர்களின் தாக்கமும்   இயல்பாக இருப்பது வழமையாகும் என்ற வகையில் வி.குமாரிடம் விஸ்வநாதனின் தாக்கம் அதிகமுண்டு என்பது அவரது பாடலிலேயே நன்கு தெரியும். அதற்கு உதாரணமாக 1960 களின் மத்தியில்  வெளிவந்த சிலபாடல்கள்.

    வி.குமார்:

    01  ஒரு நாள் யாரோ  - மேஜர்  சந்திரகாந்த்  1967 - பி.சுசீலா  - வி.குமார் 02  கல்யாணச் சாப்பாடு போடவா   - மேஜர்  சந்திரகாந்த்  1967 - டி.எம்.எஸ்   - வி.குமார் 03  நேற்று நீ சின்னப்பாப்பா    - மேஜர்  சந்திரகாந்த்  1967 - டி.எம்.எஸ்   - வி.குமார் 04  நானே பனி நிலவு   - மேஜர்  சந்திரகாந்த்  1967 - பி.சுசீலா  - வி.குமார் 05  நல்ல நாள் பார்க்கவா   - பொம்மலாட்டம்   1967 - பி.சுசீலா  - வி.குமார் 06  அடுத்தாத்து அம்புஜத்தை    - எதிர்நேச்சல்   1967 - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - வி.குமார் 07  தாமரைக்கன்னங்கள்     - எதிர்நேச்சல்   1967 1967 - பி.பி.ஸ்ரீனிவாஸ் + சுசீலா   - வி.குமார் 08  வெற்றி வேண்டுமா  - மேஜர்  சந்திரகாந்த்  1967 - சீர்காழி   - வி.குமார் 09  புலவர் சொன்னதும் பொய்யே   - ஆயிரம் பொய் 1969 - டி.எம்.எஸ் + பி.சுசீலா  - வி.குமார் 10  தில்லையிலே  சபாபதி    - ஆயிரம் பொய் 1969 - பி.சுசீலா  - வி.குமார் 11  விளக்கே நீ கொண்டஒளி நானே  - நிறைகுடம்  1969 - டி.எம்.எஸ்  - வி.குமார் 12  கண் ஒரு பக்கம்   - நிறைகுடம்  1969 - டி.எம்.எஸ் + பி.சுசீலா    - வி.குமார் 13  புன்னகை மன்னன்   - இரு கோடுகள் 1969 - ஜமுனாராணி  + பி.சுசீலா - வி.குமார் 14  நான் ஒரு  குமாஸ்தா    - இரு கோடுகள் 1969 - டி.எம்.எஸ்  - வி.குமார் 15  நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்  - நூற்றுக்கு நூறு  1969 -  பி.சுசீலா - வி.குமார் 16  நித்தம் நித்தம் ஒரு   - நூற்றுக்கு நூறு  1969 -  டி.எம்.எஸ்  - வி.குமார் 17  எங்கெல்லாம்  வளையோசை    - வெகுளிப்பேன்  1969 -  டி.எம்.எஸ்  - வி.குமார் 18  காதோடு தான் நான் பேசுவேன்   - வெள்ளிவிழா 1969 -  எல்.ஆர்.ஈஸ்வரி - வி.குமார் 19  கை நிறைய சோழி   - வெள்ளிவிழா 1969 -  பி.சுசீலா+எல்.ஆர்.ஈஸ்வரி - வி.குமார் 20  விண்ணுக்கு மேலாடை    - நாணல் 1969 -  டி.எம்.எஸ் +பி.சுசீலா - வி.குமார் 21  உன்னைத் தொட்ட காற்று வந்து    -நவக்கிரகம்  1969 -  எஸ்.பி.பி + பி.சுசீலா - வி.குமார்.

    வி.குமார் மட்டுமல்ல 1960களின் மத்தியில் அறிமுகமான சங்கர் கணேஷ் இரட்டையர்கள் மெல்லிசைமன்னர்களை போலவே தாமும் வரவேண்டும் என்று வந்தவர்கள். மெல்லிசைமன்னர்களின் இசைக்குழுவில் இருந்தவர்கள் என்பதுடன் கவிஞர் கண்ணதாசன் பரிந்துரையில் தயாரிப்பாளர் தேவர் என்பவரால் செல்வாக்குடன் அறிமுகமானவர்கள். " கவிஞர்   வழங்கிய  தேவரின் சங்கர் கணேஷ் " என்று திரைப்படங்களின் டைட்டிலிலேயே தங்கள் பெயரை பதிவு செய்தவர்கள்.  விஸ்வநாதன், கண்ணதாசனின் செல்லப்பிள்ளைகள்! சங்கர் என்பவர் விஸ்வநாதன் உதவியாளராக இருந்த மாபெரும் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் கூடப்பிறந்த தம்பி ! கணேஷ் பொங்கஸ் மற்றும் தளவாத்தியக்கலைஞராக இருந்தவர். சங்கர் கணேஷ் மெல்லிசைமன்னர்களின் இசையமைப்பை ஆசைதீர நேரடியாகக் கண்டு அனுபவித்தவர்கள். அதில் ஊறியவர்கள்.அவர்களை போலவே வர வேண்டும் என்று துடித்தவர்கள். அவர்களது இசையில் மெல்லிசைமன்னர்களின் பாதிப்பு மிகவும் இயல்பானதாகும்.

    01  நினைத்தால் மணக்கும்    -நான் யார் தெரியுமா   1967 -  டி.எம்.எஸ்  + பி.சுசீலா - இசை : சங்கர் கணேஷ். 02  விடியும் மட்டும் பேசலாம்    -நான் யார் தெரியுமா   1967 -  டி.எம்.எஸ்  + பி.சுசீலா - இசை : சங்கர் கணேஷ் 03  வா காதல்  செய்து பார்ப்போம்   - சிரித்த முகம்  1967 - ஏ.எல்.ராகவன்   + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : சங்கர் கணேஷ் 04  பூவிலும் மெல்லிய பூங் கொடி - கண்ணன் வருவான் 1967 - டி.எம்.எஸ். - இசை : சங்கர் கணேஷ் 05  நிலவுக்குப் போவோம்   -  கண்ணன் வருவான் 1967 -  டி.எம்.எஸ்  + பி.சுசீலா - இசை : சங்கர் கணேஷ். 06  பூமியைப் படைத்தது சாமியா   -  கண்ணன் வருவான் 1967 -  டி.எம்.எஸ்   - இசை : சங்கர் கணேஷ்.

    1970   களுக்குப்பின் சங்கர் கணேஷ் பல படங்களுக்கு இசையமைத்து தங்கள் தனித்துவத்தைக் காட்ட முனைந்தனர்.

    ஜி.தேவராஜன்:

    ஜி.தேவராஜன் மலையாள சினிமாவின் முக்கியமானதொரு இசையமைப்பாளர். 1960  களில் முன்னேறிக்கொண்டிருந்த மலையாள சினிமாவுக்கென தனித்துவமான மண் வாசனையுடன் உருவாகிக் கொண்டிருந்த இசையை வளம் செய்த முன்னோடி இசையமைப்பாளர். கம்யூனிச இயக்க நாடக மேடைகளில் வளர்ந்து பின் திரைக்கு   வந்தவர். வெற்றிபெற்ற  மலையாளப்படங்கள் சில தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது அப்படங்களின்  இசையை வழங்கியவர். தனது இசை மூலம் தனித்துவம் காட்டியவர். அதன் மூலம் பின் 1970 களில் சிலவாய்ப்புகளை பெற்று நல்ல பாடல்களைத் தந்தவர்.

    01  பூஞ் சிட்டு கன்னங்கள்   - துலாபாரம் 1969 - டி.எம்.எஸ் + சுசீலா  - ஜி.தேவராஜன் 02  காற்றினிலே பெரும் காற்றினிலே    - துலாபாரம் 1969 - ஜேசுதாஸ்   - ஜி.தேவராஜன் 03  சங்கம் வளர்த்த தமிழ்   - துலாபாரம் 1969 - டி.எம்.எஸ் + சுசீலா  - ஜி.தேவராஜன் 04  கடலோரம் வீடு கட்டி கற்பனையால்  - கஸ்தூரி திலகம்  1970 - டி.எம்.எஸ் + சுசீலா  - ஜி.தேவராஜன் 05  வானமெனும் வீதியிலே    - அன்னை வேளாங்கன்னி  1971 - ஜேசுதாஸ் + மாதுரி    - ஜி.தேவராஜன் 06  நீலக்கடலின் ஓரத்தில்     - அன்னை வேளாங்கன்னி  1971 - டி.எம்.எஸ்    - ஜி.தேவராஜன் 02  வெள்ளி ரதங்கள் அழகு மேகம்   - பருவராகம்   1974 - மாதுரி   - ஜி.தேவராஜன் 03  ஞாயிறு ஒளிமழையில்    - அந்தரங்கம்  1974 - கமலஹாசன்    - ஜி.தேவராஜன் 04  புதுமுகமே  சிறு மதுகுடமே     - அந்தரங்கம்  1974 - ஜேசுதாஸ் + சுசீலா     - ஜி.தேவராஜன்.

    டி.ஆர்.பாப்பா

    மிகச் சிறந்த இசையமைப்பாளர். நல்ல பட வாய்ப்புகள் வந்த போதும், அவற்றை ஏற்காமல் , சினிமாவை விட சம்பளம் குறைந்த  வானொலியில் வயலின் கலைஞராக  சேர்ந்த செவ்வியல் இசைக்கலைஞர். பின்னாளில் சீர்காழியார் பாடிய அற்புதமான பக்திப்பாடல்களுக்கு இசையமைத்த திறமைசாலி ! 72 ராகங்களில்  அபிராமி அந்தாதியை இசையமைத்து சீர்காழியைப் பாட வைத்த இசைவல்லுனர். இவர் தொடர்ச்சியாக சினிமாவில் இருந்திருந்தால் மெல்லிசைமன்னர்களுக்கும் , கே.வி.மகாதேவனுக்கும் சவாலாக இருந்திருப்பார். சினிமாவைவை விட்டு போனது சினிமா இசை ரசிகர்களுக்கு பெரும் இழப்பென்றே சொல்ல வேண்டும்.ஆயினும் பின்னாளில் பக்தி பாடல்களினால் அதை நிவர்த்தி செய்தவர்.

    சினிமாவில் பல புகழ்பெற்ற பாடல்களை தந்தவர்.குறிப்பாக 1950 மற்றும் 1960 களில் தனக்கு கிடைத்த படங்களில் நல்ல பாடல்களைத் தந்த சிறப்பான இசையமைப்பாளர்.  டி.ஆர்.பாப்பாவின்  புகழ் பெற்ற பாடல் சில.

    01  வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே  - மல்லிகா 1957- ஏ.எம்.ராஜா + சுசீலா    - இசை :டி.ஆர்.பாப்பா 02  உள்ளத்திலே உரம் வேணும்டா    - விஜயபுரிவீரன்  1960- ஏ.எம்.ராஜா     - இசை :டி.ஆர்.பாப்பா 03  இசைபாடும் தென்றலோடு     - விஜயபுரிவீரன்  1960- ஏ.எம்.ராஜா + ஜிக்கி      - இசை :டி.ஆர்.பாப்பா 04  சின்னஞ்சிறு   வயது முதல்    - தாய் மகளுக்கு கட்டிய தாலி  1959- டி.எம்.எஸ் + ஜிக்கி   - இசை :டி.ஆர்.பாப்பா.

    டி.ஆர்.பாப்பா  1960  களில்  இசையமைத்த பாடல்கள்.

    01  இரவும் வரும் பகலும் வரும்  - இரவும் பகலும் 1965- டி.எம்.எஸ்.   - இசை :டி.ஆர்.பாப்பா 02  மாலை நேரம் ஒருத்தி வந்தால்   - இரவும் பகலும் 1965- டி.எம்.எஸ் + சுசீலா    - இசை :டி.ஆர்.பாப்பா 03  உள்ளத்தின் கதவுகள் கண்களடா   - இரவும் பகலும் 1965- டி.எம்.எஸ்.   - இசை :டி.ஆர்.பாப்பா 04  இறந்தவனைச் சுமந்தவனும்   - இரவும் பகலும் 1965- எஸ்.ஏ.அசோகன்    - இசை :டி.ஆர்.பாப்பா 05  முத்தமா கை முத்தமா     - விளக்கேற்றியவள்  1965 - டி.எம்.எஸ்.+ சுசீலா    - இசை :டி.ஆர்.பாப்பா 06  இரவு நடக்கின்றது     - பந்தயம் 1967 - டி.எம்.எஸ்.+ சீர்காழி     - இசை :டி.ஆர்.பாப்பா 07  அம்மா என்பது தமிழ் வார்த்தை   - டீச்சரம்மா   1968- சுசீலா  - இசை :டி.ஆர்.பாப்பா 08  ஏடி பூங்கொடி   - மறுபிறவி    1972 - எம்.ஆர்.விஜயா    - இசை :டி.ஆர்.பாப்பா 09  சொந்தம் இனி உன் மடியில்    - மறுபிறவி    1972 - எஸ்.பி.பி + சுசீலா   - இசை :டி.ஆர்.பாப்பா 10  மேலாடை காற்றாட    - காதல் படுத்தும் பாடு    1966- சுசீலா  - இசை :டி.ஆர்.பாப்பா 11  வெள்ளி நிலா வானத்திலே    - காதல் படுத்தும் பாடு   1966- சுசீலா  - இசை :டி.ஆர்.பாப்பா 12  இவள் ஒரு அழகிய பூஞ் சிட்டு    - காதல் படுத்தும் பாடு   1966- டி.எம்.எஸ்.+ சுசீலா- இசை :டி.ஆர்.பாப்பா 13  வெண் நிலா நேரத்திலே வேணுகானம்    - அவசரகல்யாணம் 1972- சுசீலா  - இசை :டி.ஆர்.பாப்பா.

    எஸ்.கோவர்தனம்:

    சிறந்த சுரஞானம் மிக்க இசையமைப்பாளர். புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனத்தின் சகோதரர். பல இசையமையமைப்பாளர்களின் உதவியாளராக இருந்தவர். 1950 களிலேயே நல்ல பல பாடல்களைத் தந்தவர். 1960 களிலும் சில படங்களுக்கு இசையமத்த போதும் நினைவில் நிற்கும் நல்ல  பல பாடல்களைத் தந்தவர்

    01  அழகைப் பாட வந்தேன்   - பொற்சிலை   1968 - டி.எம்.எஸ்.+ சுசீலா - எஸ்.கோவர்தனம் 02  அக்கரையில் அவனிருக்க    - பொற்சிலை   1968 - சுசீலா - எஸ்.கோவர்தனம் 03  எண்ணம் போல கண்ணன் வந்தான்    - பூவும் பொட்டும்   1968 - சுசீலா - எஸ்.கோவர்தனம் 04  நாதஸ்வர ஓசையிலே     - பூவும் பொட்டும்   1968 - டி.எம்.எஸ்.+ சுசீலா - எஸ்.கோவர்தனம் 05  உன் அழகைக்  கண்டு கொண்டால்  - பூவும் பொட்டும் 1968 - பி.பி.ஸ்ரீனிவாஸ்  - எஸ்.கோவர்தனம் 06  முதல் என்பது தொடக்கம்  - பூவும் பொட்டும் 1968 - டி.எம்.எஸ்  - எஸ்.கோவர்தனம் 07  அந்த சிவகாமி மகனிடம்   - பட்டணத்தில் பூதம்  1967 - டி.எம்.எஸ்.+ சுசீலா  - எஸ்.கோவர்தனம் 08  கங்கை நதியோரம்    - வரப்பிரசாதம்  1975 - ஜேசுதாஸ் + வாணி   - எஸ்.கோவர்தனம்.

    1965 இல் பிரிந்த விஸ்வநாதன் 1966 இல் இசையமைத்த படங்கள்.

    1966 : நீ, சாந்தி .அன்பே வா  - கொடிமலர் - எங்க பாப்பா - குமரிப்பெண் - கௌரி கல்யாணம் - சித்தி - தட்டுங்கள் திறக்கப்படும் - நம்ம வீட்டு லட்சுமி - நாடோடி - தட்டுங்கள் திறக்கப்படும் - பறக்கும் பாவை -பெற்றால் தான் பிள்ளையா - ராமு - மோட்டார் சுந்தரம்பிள்ளை.

    மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியுடனான பிரிவின் பின்  இத்தனை படங்களில் வெளிவந்த பாடல்களைக் கேட்கும் போது அவற்றில் பல பாடல்கள்  நம்முடைய காதுகளில்   மிக இலவுவாக நுழைந்த பாடல்களாக இருப்பதை நாம்  அவதானிக்கலாம். அந்த அளவுக்கு அவை வானொலிகளில் ஒளிபரப்பாகி புழபெற்றன எனலாம்.

    அவற்றை சில பாடல்கள் சினிமாவின் தேவைற்ற வர்த்தக உத்திகளுக்கென உருவாக்கப்பட்ட செயற்கைத்தனங்களுக்காக அமைக்கப்பட்ட பாடல்களும் அடக்கம். பாடல்களின் உத்திகளில் உலக இசையின் தாக்கத்தை  , குறிப்பாக மேலைநாட்டு இசையின் தாக்கத்தை இக்காலங்களிலிருந்தே தமிழ் சினிமா அதிகம் உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கியது எனலாம்.

    மேற்கு நாடுகளின் கலாச்சாரத்தில் மிக இயல்பாக இருக்கும் காபரே பாடல்கள் வலிந்து அரைகுறை உடைகளுடனான படங்களாக அரங்கேறத் தொடங்கியது. தமிழ் சினிமாவை கலைப்பக்கம் திரும்பவிடாமல் செய்ததில் கிஞ்சித்தும் கலை ரசனை இல்லாத படத்தயாரிப்பு வியாபாரிகள் முக்கியமாக விளங்கினர்.

    காபரே பாடல்களை வைப்பதென்பது ரசிகர்களை வரவழைக்கும் ஒரு யுத்தியாகவும் , மேலைநாட்டுக் கலாச்சாரத்தை விட நம் நாட்டு கலாச்சாரம் மேன்மையானது என எண்ண வைக்கும் ஒரு போக்காகவும் அமைக்கப்பட்டு மேலைத்தேய இசை  என்றாலே அரைகுறை உடுப்புகளுடன் ஆடுவது என்றும் மேலைத்தேய இசை என்பதும் தரக்குறைவானது,  இசையில்லாதது என்பது மாதிரியான உளவியலை ஏற்படுத்தவும் பயன்பட்டது. பெண்களில் நாயகிகள் கற்பில் சிறந்தவர்களாகவும், காபரே நடனம் ஆடுபவர்கள் வில்லிகளாகவும் , சதிகாரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். காபரே பாடலைப் பாடுவதற்கென்றே சில பாடகிகளும் வடிவமைக்கப்பட்டனர். ஹிந்தியில் ஆஷா போஸ்லே, உஷா உதுப் போன்றவர்களும் தமிழில் எல்.ஆர்.ஈஸ்வரியும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.

    இவர்கள் பாடிய பாடல்களை இசைத்தட்டுகளில் ரசிக்கும் நாம் திரையில் பார்க்க முடியாத ஒரு நிலையும் ஏற்படுகின்றது. திரை இசையமைப்பாளர்களை பொறுத்தவரையில் உலக இசைவடிவங்களில்  எல்லாம் ஓர் பொது தன்மை உண்டென்பதையும் ,ஒரே மூலத்தின் பல்வேறு வடிவங்கள் என்ற புரிதல் இருந்திருக்கிறதென்பதையும் , எந்தமாதிரியான இசை என்றாலும் அதை  அவர்கள் ஈடுபாட்டுடன்  தந்தார்கள் என்பதையும் இப்போது நம்மால் உணர முடிகிறது.

    திரைப்படத்திற்கு இசை வழங்குவதென்பது எந்த விதியுமற்ற பரந்த வெளியாக இருந்ததால் அது குறித்த கட்டுப்பாடுகள் இல்லாததாலும் இசையமைப்பாளர்கள் தமது ரசனைக்கு ஏற்பவே இசையமைக்க முடிந்தது. இவர்களுக்கு முன்மாதியாக ஹிந்தி திரை இசை ஆக்கிரமிப்பு செய்ததும் தமிழ் திரையிசையமைப்பாளர்கள் அவர்களை நோக்குவதும் ,அவர்களைத் தவிர்க்க முடியாத ஒரு நிலையும் தொடர்ந்து கொண்டிருந்ததால் இவர்களும் அந்த அலையில் மோதிப்புரண்டு அடிபட்டுக் கொண்டிருந்தனர்.

    அந்தவகையிலேயே கபெரே நடனம் இசையுடன் உள்நுழைந்தது.

    1960 களில் மெதுவாக ஆரம்பித்த " காபரே " நடனக்காட்சிகள் ,அதற்கான பாடல்கள் 1965களில் அதிக வீச்சுடன் பரவ ஆரம்பித்தது. கண்ணகி,கற்பு என பேசிக்கொண்டு வியாபார ஊக்கு நெறியாக காபரே நடனக்காட்சிகளும் இடைச் செருகல்களாக புகுத்தப்பட்டன. அதற்கும் முன்னோடியாக ஹிந்தி திரைப்படங்களே காரணமாயிருந்தன. விதைகளுக்கு ஏற்ப மரம் முளைப்பது போல இவ்வகையான பாடல்களும் உருவாகின.

    காபரே என்பது ஐரோப்பாவில் தோன்றிய இசை கலந்த பொழுது போக்கு நாடக வடிவமாகும். இது பெரும்பாலும் மது பரிமாறப்படும் உணவகங்களிலும் , மதுச்சாலைகளிலும் , இரவுவிடுதிகளிலும் , சூதாட்டசாலைகளிலும் இசையுடன் கூடிய தனிநபர் மற்றும் சிறுகுழுவினரின் நடனத்துடனும் நிகழ்த்தப்பட்ட வயதுவந்தோர்களுக்கான   களியாட்ட அம்சமாகும். பின் அமெரிக்கா சென்று விஸ்தாரம் பெற்று நிழல் உலகத்தின் ஒரு முக்கிய அம்சமாகவே இருந்தது.

    ஜாஸ் இசையுடன் இணைந்த காபரே அமெரிக்காவில் அதற்கான இசைக்கலைஞர்களையும் உருவாக்கியது. அவர்களில்   Nina Simone, Eartha Kitt , Peggy Lee , Lorette Hildegarde போன்றோரைக் குறிப்பிடலாம். இந்த வகை இசையை பொறுத்தவரையில் ஜாஸ் இசையில் 1930௧ளிலும்,1940௧ளிலும் புகழ் பெற்றிருந்த Benny Goodman சில பாடல்களை வாத்திய இசையில் அமைத்து பொழுதுபோக்கு இசைக்கு முக்கிய பங்காற்றினார். அந்தவகையில் அவர் வாத்திய இசையில் அமைத்த இசை அக்கால ஜாஸ் இசையுடன் ஆடல்காட்சிகளிலும் இடம் பிடித்தன. அவர் இசையில் 1930களில் வெளிவந்த " Sing, sing, sing, " என்ற வாத்திய இசைவடிவம் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.

    ஹிந்தி திரையிசையில் மேற்கத்திய இசைவடிவத்தை அறிமுகம் செய்தவர் என அறியப்படும் சி.ராமச்சந்திரா Benny Goodmanனின் இசையமை முன்மாதிரியாகக் கொண்டவர் என்பது வரலாறு.

    காபரே ஒரு கலை என்ற ரீதியில் தனியே ஒரு கலைஞர் , மற்றும் சிறுகுழுவினர் என பலவகையில் ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்டு வந்தது. ஒருவரின் இசை கலந்த நடிப்புடனும் , ஆடலுடனும் ,முக்கியமாகப் பாடலுடனும் இணைந்திருந்தது என்று வகையில் இந்தப்பாடல் முறையையும் இந்திய சினிமா  ,குறிப்பாக வி.குமார்

    முதலில் இந்தி சினிமாவும் அதைப்பின்பற்றி தமிழ் சினிமாவும் தமக்கான முறைகளில் பயன்படுத்திக் கொண்டனர்.

    குறிப்பாக மதுச்சாலைகளிலும் , திருடர்கள் கூடும் இடங்களிலும் ,அந்த இடங்களில் கதாநாயகர்கள் மாறுவேடங்களில் சென்று கிரிமினல் கூட்டங்களை கண்டுபிடிக்கும் காட்சிகளிலும் இது போன்ற காட்சிகளை அமைத்து பாடல்களையும் தந்தார்கள்.

    உண்மையில் இது ஒன்று புதுமையான முறையல்ல என்றே தோன்றுகிறது. ஆணின் காமம் சார்ந்த வடிகாலாக விளங்கிய தேவதாசிகளிடம் செல்லும் ஒரு நீண்ட வரலாறு நம்மிடம் உண்டு என்ற வகையில் பல பாடல்கள் நாடகங்களிலும் பின்னர் திரைப்படங்களிலும் இடம்பெற்றன.

    சங்கரதாஸ் சுவாமிகள் நாடங்களில் கூட இந்நிலைகள் வெளிப்பட்டிருக்கின்றன. புராண இதிகாசங்களின் கதைகளை அவர் இசைக்கலந்த நாடகமாக்கியதன் விளைவுகள் இவை. கோவலன், சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகப்பாடல்களில் இவற்றை நாம் காணலாம்.

    "காமி சத்யபாமா கதவைத் திறவாய் " [சத்தியவான் சாவித்திரி]

    " மனோரம்மிய மயிலே மதிவதனி " [ பாமா விஜயம்]

    தாசிகளிடம் சென்று பாடுவதாக அமைக்கப்பட்ட நாடகப்பாடல்கள் இவை.

    பின்னர் இதுவே " கதவைச் சாத்தடி , கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் " [ரத்தக்கண்ணீர் ] மற்றும் பராசக்தி [1952] படத்தில் " ஓ..ரசிக்கும் சீமான் வா " என்ற பாடல்களும் , பின்னர் காதல் தோல்வியால் மனம் குழம்பிய தேவதாஸை அவனது நண்பன் மனநிம்மதிக்காக தாசியிடம் கொண்டு செல்லும் காட்சியில் " சந்தோசம் வேணுமென்றால் இங்கே கொஞ்சம் என்னை பாரு காண்ணா "   என்ற பாடலையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

    "சந்தோசம் வேணுமென்றால் " தேவதாஸ் படப்பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்பது குறிப்பித்தக்கது.

    தமிழ் திரைப்படங்களில் கால மாறுதல்களுக்கேற்ப ஏற்ப இதுமாதிரியான சூழ்நிலைகளுக்கு பாடல்கள் வெளிவந்துள்ளன என்பதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் 1965 களிலும் அதைத்தொடர்ந்து காலங்களிலும் காபரே பாடல்கள் அதிகம் இடம் பெறத்தொடங்கின.

    ஜாஸ் இசையுடன் ஒன்றிக்கலந்த காபரே நடன இசையை மனநிம்மதி தேடும் நாயகன்/ நாயகி செல்லுமிடமான மதுச்சாலையில் பாடும் பாடல்கள் சிலவற்றை 1960 களின் முற்பகுதியிலேயே மெல்லிசைமன்னர்கள் தந்தார்கள்   என்பதற்கு சான்றாக கீழ்கண்ட இரு பாடல்களைக் கூறலாம்.

    01 இது வேறு உலகம் தனியுலகம் - நிச்சயதாம்பூலம் 1962 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி -இசை : விஸ்வநாதன்   ராமமூர்த்தி

    02 அம்மம்மா கேளடி தோழி - கறுப்புப்பணம் 1963 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்   ராமமூர்த்தி

    காபரே பாடல்களை வைப்பதென்பது ரசிகர்களை வரவழைக்கும் ஒரு யுத்தியாகவும் , மேலைநாட்டுக் கலாச்சாரத்தை விட நம் நாட்டு கலாச்சாரம் மேன்மையானது என எண்ண வைக்கும் ஒரு போக்காகவும் அமைக்கப்பட்டு மேலைத்தேய இசை  என்றாலே அரைகுறை உடுப்புகளுடன் ஆடுவது என்றும் மேலைத்தேய இசை என்பதும் தரக்குறைவானது, இசையில்லாதது என்பது மாதிரியான உளவியலை ஏற்படுத்தவும் பயன்பட்டது. பெண்களில் நாயகிகள் கற்பில் சிறந்தவர்களாகவும், காபரே நடனம் ஆடுபவர்கள் வில்லிகளாகவும் ,சதிகாரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். காபரே பாடலைப் பாடுவதற்க்கென்றே சில பாடகிகளும் வடிவமைக்கப்பட்டனர். ஹிந்தியில் ஆஷா போஸ்லே, உஷா உதுப் போன்றவர்களும் தமிழில் எல்.ஆர்.ஈஸ்வரியும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.

    01 ஆடவரெல்லாம் ஆடவரலாம்   - கறுப்புப்பணம் 1963 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்   ராமமூர்த்தி.

    02 அடடா என்ன அழகு - நீ 1965 - எல்.ஆர்.ஈஸ்வரி -இசை : விஸ்வநாதன்

    03 பளிங்கினால் ஒரு மாளிகை   - வல்லவன் ஒருவன்   1966 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : வேதா

    04 அந்த அறையினில் ஒரு ரகசியம்     - சி.ஐ.டி சங்கர் 1966 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : வேதா

    05 You keep saying you have something - மூன்றெழுத்து   1966 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : மெல்லிசைமன்னர் டீ.கே.ராமமூர்த்தி

    06மம்மா ..கன்னத்தில் கன்னம் வைத்து   - வல்லவன் ஒருவன்   1966 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : வேதா

    07 பொன்னாலே வாழும் - அன்னையும் பிதாவும் 1969 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    08 கோட்டை மதில் மேலே   - திருடன் 1969 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    இந்தப் பாடல்களை இசைத்தட்டுகளில் ரசிக்கும் நாம் திரையில் பார்க்க முடியாத ஒரு நிலையும் ஏற்படுகின்றது.

    திரை இசையமைப்பாளர்களை பொறுத்தவரையில் உலக இசைவடிவங்களில்  எல்லாம் ஓர் பொது தன்மை உண்டென்பதையும் , அவை ஒரே மூலத்தின் பல்வேறு வடிவங்கள் என்ற புரிதல் இருந்திருக்கிறதென்பதையும் , எந்தமாதிரியான இசை என்றாலும் அதை  அவர்கள் ஈடுபாட்டுடன்  தந்தார்கள் என்பதையும் இப்போது நம்மால் உணர முடிகிறது.

    படங்களுக்காக இவை போன்ற சில பாடல்கள் அமைந்தாலும், இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்கள் பலவற்றையும் தந்திருக்கிறார்கள். குறிப்பாக மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வேகமும் அதில் அவர் காட்டிய நாதமும் மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

    பிரிவுக்குப் பின்னர் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படங்களில் வெளிவந்த பாடல்களை நோக்கும் போது அடுத்து வருகின்ற பத்தாண்டுகளும் இசைரசிகர்களின் பேராதரவை பெறப் போவதை கட்டியம் கூறின.

    ஒவ்வொரு படத்திலும் எத்தனைவிதமான இனிய பாடல்கள் என்பதற்கு   1966 ல் வெளிவந்த பாடல்களே உதாரணமாக விளங்குகின்றன.

    இந்தக்காலங்களில் வெளிவந்த சில முக்கிய பாடல்கள்.

    1965 கலங்கரை விளக்கம்

    01 பொன் எழில் பூத்தது புது வானில் - கலங்கரை விளக்கம் 1965 - டி.எம்.எஸ் +பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    02 என்னை மறந்ததேன் - கலங்கரை விளக்கம் 1965 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    03 காற்று வாங்கப் போனேன்   - கலங்கரை விளக்கம் 1965 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    1965   நீ

    01  வெள்ளிக்கிழமை விடியும் வேளை - நீ 1965  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    1965 சாந்தி

    01  செந்தூர் முருகன் கோவிலிலே - சாந்தி  1965  - பி.சுசீலா + பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்  - சாந்தி  1965  - பி.சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  யார் அந்த நிலவு  - சாந்தி  1965  - டி.எம்.எஸ்   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966  எங்க பாப்பா 01  ஒரு மரத்தில் குடியிருக்கும்  - டி.எம்.எஸ்.+ எம்.எஸ்.ராஜேஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். 02  புது வீடு வந்த நேரம்     - டி.எம்.எஸ்.+ சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  சொந்த மாமனுக்கு    - டி.எம்.எஸ்.+ சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    1966  அன்பே வா 01  உள்ளம் என்றொரு கோவிலிலே  - டி.எம்.எஸ். - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். 02  ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்     - டி.எம்.எஸ்.+ சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  நான் பார்த்ததில் அவள் ஒருத்தியை தான்    - டி.எம்.எஸ்.+ சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    04 Love Birds Love Birds    - சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    1966 கொடிமலர் 01  மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியுமில்லை   - சுசீலா . - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். 02  மௌனமே பார்வையால்      - பி.பி.ஸ்ரீனிவாஸ்    - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  சிட்டாகத் துள்ளி துள்ளி வா     - டி.எம்.எஸ்.+ சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். 04  கண்ணாடி மேனியடி   - பி.சுசீலா = எல்.ஆர்.ஈஸ்வரி . - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966 குமரிப்பெண் 01  தேன் இருக்கும் மலரினிலே  - குமரிப்பெண்  1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா  - குமரிப்பெண் 1966- பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  யாரோ ஆடாத தெரிந்தவர் யாரோ   - குமரிப்பெண் 1966- எல்.ஆர்.ஈஸ்வ்ரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  நடந்தது என்னவென்று நீயே சொல்லு  - குமரிப்பெண் 1966- பி.பி.ஸ்ரீனிவாஸ் + எல்.ஆர்.ஈஸ்வ்ரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966   கௌரி கல்யாணம் 01  ஒருவர் மனதை ஒருவர் அறிய  - கௌரி கல்யாணம் 1966  - டி.எம்.எஸ்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  வெள்ளைக் கமலத்தில்  - கௌரி கல்யாணம் 1966  - சூலமங்கலம்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  திருப்புகழை பாடப் பாட  - கௌரி கல்யாணம் 1966 - பி.சுசீலா + சூலமங்கலம் - 04  வரணும் வரணும் மகாராணி - கௌரி கல்யாணம் 1966 - டி.எம்.எஸ்  பி.சுசீலா-

    1966   சித்தி 01  காலமிது காலமிது  -  சித்தி - 1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  சந்திப்போமா இன்று  -  சித்தி - 1966  - பி.பி.ஸ்ரீனிவாஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  தண்ணீர்  சுடுவதென்ன  - - சித்தி - 1966  - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966   தட்டுங்கள் திறக்கப்படும் 01  கல்யாணப்பந்தல் அலங்காரம்   -  தட்டுங்கள் திறக்கப்படும்  - 1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  கண்மணி பாப்பா   -  சித்தி - 1966  - ஜே.பி.சந்திரபாபு   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966   நாடோடி 01  நாடு அதை நாடு   -  நாடோடி  - 1966  - டி.எம்.எஸ். + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  அன்றொரு நாள் இதே நிலவில்  -  நாடோடி  1966  - டி.எம்.எஸ். + பி.சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  உலகமெங்கும் ஒரே மொழி   - நாடோடி  1966  - டி.எம்.எஸ். + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  அன்றொரு நாள் இதே நிலவில்  - நாடோடி  1966  - எல்.ஆர்.ஈஸ்வரி . + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 05  பாடும் குரல் இங்கே   - நாடோடி  1966  -  பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 06  ரசிக்கத்தானே இந்த அழகு    - நாடோடி  1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 07  கடவுள் செய்த பாவம்     - நாடோடி  1966  - டி.எம்.எஸ்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 06  திரும்பி வா ஒளியே     - நாடோடி  1966  - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966   நம்ம வீட்டு லட்சுமி 01  நல்ல மனைவி நல்ல பிள்ளை    -  நம்ம வீட்டு லட்சுமி 1966  - சீர்காழி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  அலங்காரம் கலையாமல்   -  நம்ம வீட்டு லட்சுமி  1966  - ஜேசுதாஸ்  + எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  பணமிருந்தால் போதுமடா   - நம்ம வீட்டு லட்சுமி  1966 - சீர்காழி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  வழி வழியே வந்த தமிழ் பண்பாடு   - நம்ம வீட்டு லட்சுமி 1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966   பறக்கும் பாவை 01  கல்யாண நாள் பார்க்க  - பறக்கும் பாவை 1966  - டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  முத்தமோ  மோகமோ     - பறக்கும் பாவை   1966  - டி.எம்.எஸ். +  எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  சுகம் எதிலே      - பறக்கும் பாவை   1966  -  டி.எம்.எஸ். + ஜேசுதாஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  உன்னைத்தானே ஏய்   - பறக்கும் பாவை   1966 -  டி.எம்.எஸ். +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 05  நிலவென்னும் ஆடை கொண்டாளோ  - பறக்கும் பாவை   1966  -  டி.எம்.எஸ் +  சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 06  யாரைத்தான் நம்புவதோ   - பறக்கும் பாவை   1966  -   சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966   பெற்றால்  தான் பிள்ளையா 01  செல்லக்கியே மெல்லப் பேசு     - பெற்றால்  தான் பிள்ளையா  1966 - டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  கண்ணன்  பிறந்தான் எங்கள்    - பெற்றால்  தான் பிள்ளையா  1966 - டி.எம்.எஸ். +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  நல்ல நல்ல பிள்ளைகளை - பெற்றால்  தான் பிள்ளையா  1966  - டி.எம்.எஸ். + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  சக்கரைக்கட்டி ராசாத்தி    -  பெற்றால்  தான் பிள்ளையா   1966 -  டி.எம்.எஸ். +  சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966   ராமு 01  நிலவே என்னிடம் நெருங்காதே   -  ராமு 1966 -  டி.எம்.எஸ். +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  கண்ணன் வந்தான் எங்கள்   - ராமு 1966  -  டி.எம்.எஸ். +  சீர்காழி    - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  பச்சை மரம் ஒன்று  -  ராமு 1966 -  ஸ்ரீனிவாஸ் . +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  முத்து சிப்பி மெல்ல மெல்ல    -  ராமு 1966 -  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1966   மோட்டார் சுந்தரம்பிள்ளை 01  மனமே முருகனின் -  மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966 -  ராதா ஜெயலட்சுமி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  காத்திருந்த கண்களே  -  மோட்டார் சுந்தரம்பிள்ளை1966 -  ஸ்ரீனிவாஸ் . +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  துள்ளித் துள்ளி விளையாட   -  மோட்டார் சுந்தரம்பிள்ளை1966 -  சூலமங்கலம் +  சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியுடனான பிரிவுக்கு பின் ,அடுத்த ஆண்டிலேயே இத்தனை கற்பனை வளம் எல்லாம் கொட்டி விட்டால் அடுத்தடுத்த ஆண்டுகளில் என்னாகும் என்ற எண்ணம் இந்தப்பாடல்களைக் கேட்கும் யாவருக்கும் இருக்க முடியாது.

    தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் ஆண்டுக்கு சராசரியாக 10 திரைப்படங்களுக்கு இசைவழங்கிய மெல்லிசைமன்னரின் படைப்பில் பல இனிய பாடல்கள் வெளிவந்தன. எத்தனை,எத்தனை விதமான உணர்ச்சி பாவங்கள் !!

    தனியே இசையமைப்பதில் உள்ள அவரது திறமையும் ,மிகுதியான தன்னம்பிக்கையும் , திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அசாத்தியமானது.

    1965 முதல் 1969 வரை அவர் இசையமைத்த படங்கள்:

    1967 : அனுபவி ராஜா அனுபவி - அனுபவம் புதுமை - காவல்காரன் - செல்வமகள் - தங்கை - நெஞ்சிருக்கும் வரை - பெண் என்றால் பெண்.

    .1968 :  அன்புவழி  உயர்ந்த மனிதன் - உயிரா மணமா - என் தம்பி - கலாட்டா கல்யாணம் - தாமரை நெஞ்சம் - நீயும் நானும் - நிமிர்ந்து நில் - ரகசிய போலீஸ் 115  - லட்சுமி கல்யாணம்- குடியிருந்த கோயில்.

    1969 :  அன்பளிப்பு -அன்னையும் பிதாவும் - அத்தை மகள் - ஓடும் நதி - கண்ணே பாப்பா  - கன்னிப்பெண் - சாந்தி நிலையம் - சிவந்த மண் - திருடன் - நில் கவனி  காதலி  - பால்குடம் - பூவா தலையா.

    1965 முதல் 1969 வரை அவரது படைப்பின் வீச்சு சற்றும் குறையவில்லை என்பதை அவரது பாடல்களில் இசைந்து வரும் இயல்பான இசையும் , அதீத கற்பனை வளமும் ,இயல்பான இசையோட்டமும் நிரூபிக்கின்றன.

    1966 – 1969 வரை இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சில முக்கிய பாடல்களை பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

    01 முத்துக் குளிக்க வாரீகளா - அனுபவி ராஜா அனுபவி   1967 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி

    - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    02 கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்   - அனுபவம் புதுமை 1967 - பி.பி.ஸ்ரீனிவாஸ் . + சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    03 மெல்லப்போ மெல்லப்போ - காவல்காரன் 1967 - டி.எம்.எஸ். + எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    04 குயிலாக நானிருதென்ன   - செல்வமகள் 1966 - டி.எம்.எஸ். + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    05 கேட்டவரெல்லாம் பாடலாம் - தங்கை 1967 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    06 பூ முடிப்பாள் இந்த   - நெஞ்சிருக்கும் வரை 1967 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    07 கேட்டவரெல்லாம் பாடலாம் - தங்கை 1967 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    08 சிரித்தாலும் கண்ணீர் வரும் - பெண் என்றால் பெண் 1967 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    09 அந்த நாள் ஞாபகம்     - உயர்ந்த மனிதன் 1968 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    10 நாளை இந்த வேளை பார்த்து   - உயர்ந்த மனிதன் 1968 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    11 வெள்ளிக்கிண்ணம் தான் - உயர்ந்த மனிதன்1967 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    12 கொடியில் இரண்டு மலர் - உயிரா மானமா 1968 - டி.எம்.எஸ் + suseelaa - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    13 முத்து நகையே உன்னை   - என் தம்பி 1968 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    14 நல்ல இடம் நீ வந்த இடம்   - கலாட்டா கல்யாணம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    15 தித்திக்கும் பால் எடுத்து   - தாமரை நெஞ்சம்   1968 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    16 ஆலயம் என்பது வீடாகும்   -   தாமரை நெஞ்சம் 1968 - பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    17 தேடி வரும் தெய்வ சுகம் - நிமிர்ந்து நில்   1968 - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    18 உன்னை எண்ணி என்னை மறந்தேன் -   ரகசிய போலீஸ் 115   1968 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    19 கண்ணில் தெரிகின்ற வானம்   -   ரகசிய போலீஸ் 115   1968 - டி.எம்.எஸ் + ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    20 என்ன பொருத்தம்   -   ரகசிய போலீஸ் 115   1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    21 பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் -   லட்சுமி கல்யாணம் 1968 - பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    22 ராமன் எத்தனை ராமனடி   -   லட்சுமி கல்யாணம் 1968 - பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    23 தேரு வந்தது போலிருந்தது   - அன்பளிப்பு 1969 - டி.எம்.எஸ் +பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    24 வள்ளிமலை மான் குட்டி   - அன்பளிப்பு 1969 - டி.எம்.எஸ் +பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    25 காலமகள் மடியினிலே ஓடும் நதி- ஓடும் நதி 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    26 குன்றத்தில் கோயில் கொண்ட   - ஓடும் நதி 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    27 மலரும் மங்கையும் ஒரு ஜாதி   - அன்னையும் பிதாவும் 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    28 கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா   - கண்ணே பாப்பா   1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    29 தென்றலில் ஆடை பின்ன   - கண்ணே பாப்பா   1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    30 பௌர்ணமி நிலவில்   - கன்னிப்பெண் 1969 - எஸ்.பி.பி + எஸ்.ஜானகி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    31 ஒளி பிறந்த போது   - கன்னிப்பெண் 1969 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    32 கடவுள் ஒரு நாள் உலக்கைக் காண - சாந்தி நிலையம் 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    33 இயற்கை என்னும் இளையகன்னி - சாந்தி நிலையம் 1969 - எஸ்.பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    34 ஒரு ராஜா ராணியிடம் - சிவந்த மண் 1969 - டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    35 பட்டத்து ராணி பார்க்கும் பார்வை - சிவந்த மண்1969 - எஸ்.பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    36 பார்வை யுவராணி கண்ணோவியம்   - சிவந்த மண்1969 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    37 முழு நிலவின் திருமுகத்தில் - பால்குடம் 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

    38 ஆடலுடன் பாடலைக் கேட்டு - குடியிருந்த கோயில் 1968 - டி.எம்.எஸ் +பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    1960களிலே புத்தெழுச்சியாக ஆரம்பித்த மெல்லிசைமன்னர்களின் இசை பின் வந்த பலருக்கு ஆதர்சமாக விளங்கியது. ஹிந்தி திரை இசையின் வாத்திய இசைக்கோர்வைகளுக்கு நிகராகவும் வளர்ந்தது.

    தமிழில் 1960 களின் மத்தியில் அறிமுகமான புதிய சில இசையமைப்பாளர்களின் இசையிலும் நல்ல பல பாடல்கள் வெளிவந்தாலும் ,அவற்றிலும் விஸ்வநாதனின் நிழல் படிந்திருந்தன்றால் மிகையில்லை என்று சொல்லலாம். புதியவர்கள் தொடர்ந்து இசை தந்தாலும் விஸ்வநாதனே தொடர்ந்து முன்னிலையிலிருந்தார். படைப்பாற்றலில் அவருக்கு நிகராக யாராலும் வரமுடியவில்லை என்பதே யதார்த்தமாக இருந்தது.

    என்னதான் அதீததிறமை இருந்தாலும் கால மாற்றத்திற்கேற்ப தனது இடத்தைத் தக்கவைக்க தன்னை புதுப்பிக்க வேண்டிய நிர்பந்தம் மெல்லிசைமன்னர் விஸ்வநாதனுக்கு நேர்ந்தது. அதையும் அவருக்கேயுரிய சமயோசித மதிநுட்பத்துடன் நிலைநாட்டினார் என்றே சொல்ல வேண்டும். அந்த புதிய அலையை 1970 களில் உருவாக்கிக் காட்டினார்.

    [தொடரும் ]

          Save

    Postad



    You must be logged in to post a comment Login