Recent Comments

    கேனயர்களின் முதுகில் சவாரி செய்யும் ஊடகங்கள்

    புலிகள் தமிழ் தலைவர்களைக் கொன்றதால், அவர்களோடு டீல் போட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதாக கூட்டமைப்பு சயந்தன் சொன்னதால் சர்ச்சை நடந்தது தெரிந்ததே.

    இது பற்றி கூட்டமைப்பு கூட்டத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதாகவும், மாத்தயாவையும் 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றது புலிகளே என்று கூட்டமைப்பு முக்கியஸ்தர் கூறியதாகவும், இதனால் கோபமடைந்த சிறிதரன் உட்பட்டோர் 'நீங்கள் சொல்லும் கொலைகளை எல்லாம் செய்ததாக தலைவர் உங்களிடம் வந்து சொன்னாரா?' என்று கேள்வி கேட்டதாகவும் தகவல்கள் பேஸ்புக்கில் வந்திருக்கின்றன.

    அட, இப்பதானே புரிகிறது!

    தான் இறந்து விட்டதாக தலைவர் தானே வந்து சொல்லி, திடீர் விசாரணை அதிகாரிகள் வழங்கிய மரண அத்தாட்சிப் பத்திரத்தைக் காணும் வரை இவர்கள் நம்ப மாட்டார்கள்.

    இது அல்ல, பிரச்சனை!

    Pagetamil என்ற இணையத் தளம் தனது செய்தியில் அதைச் சொன்னது மாவை சேனாதிராசா என்றிருக்கிறது. http://www.pagetamil.com/31992/ ஆனால் முன்பு சிறிதரனுக்கு வேண்டப்பட்ட தமிழ்வின் இணையத் தளம் அதே செய்தியை கிட்டத்தட்ட cut and paste செய்து மாவைக்கு பதிலாக சுமந்திரன்தான் அவ்வாறு கூறினார் என்றிருக்கிறது.

    https://www.tamilwin.com/politics/01/204169?ref=home-imp-parsely

    முழுச் சமூகமுமே கேனயர்களாக இருக்கும் போது, எருமைமாடுகள் மனிதர்களின் முதுகில் சவாரி செய்வது மட்டுமல்ல, ஏரோப்பிளேனும் ஓட்டும்!

    Postad



    You must be logged in to post a comment Login